பாகிஸ்தான் சிறுவனுக்கு கருணை காட்டிய சுஷ்மா !

Friday, October 20th, 2017

பாகிஸ்தான் சிறுவனின் மருத்துவ தேவைக்காக இந்தியா வர விசா வழங்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் காஷிப் என்பவரின் மகன் அப்துல்லா, இச்சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது அவனுடைய மருந்துகள் தீர உள்ள நிலையில் இந்தியாவில் தான் அதற்க்கான மருத்துவ ஆலோசனைகளை பெற்று மேலும் மருந்துகளை பெற தேவைகள் உள்ளதால் இந்தியா வரவேண்டி தேவையுள்ளது.

இதனால் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ட்விட்டர் பக்கத்தில் காஷிப் இந்தியா வரத் தேவையான விசா வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.அதனை ஏற்றுக் கொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மருத்துவ விசா வழங்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதிலளித்தார். மேலும் இன்னொருட்விட்டர் பதிவில் பாகிஸ்தானிய பெண் ரஃபீக் மேமனின் கல்லீரல் அறுவை சிகிச்சையை இந்தியாவில் மேற்கொள்வதற்காக விசா வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியிருந்தார். சமீப காலங்களில் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா வழங்குவதில் சுஷ்மா ஸ்வராஜ் கருணை காட்டி வருவது கவனிக்கத்தக்கது

Related posts: