பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் : 10 பேர் பலி!
Friday, November 30th, 2018ஆப்கானிஸ்தானிலுள்ள பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரித்தானியாவிற்கு சொந்தமான உலகின் முன்னணி பாதுகாப்பு நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு வெளியே கார்க்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் பின்னர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் ஆப்கன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பாதுகாப்பு நிறுவனம் காபூலிலுள்ள பிரித்தானிய தூதுவராலயத்திற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூழல் மாசுபாட்டால் வருடாந்தம் 48,000 பேர் உயிரிழப்பு!
ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மசூதி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: எகிப்தில் 235 பேர் பலி!
|
|