ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுத்துள்ள பாகிஸ்தான்!

Monday, July 17th, 2017

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது

ஆப்கானிஸ்தான் எல்லை பிராந்தியமான வட மேற்கு பகுதியில் இந்த பாரிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளில் செயற்பட்டு வரும் நிலையில், அவர்கள் பாகிஸ்தானில் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் செயற்படுவதை பாகிஸ்தான் மறுத்து வந்ததுஎனினும் பாகிஸ்தானில் கடந்த இரண்டு வருடங்களில் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனஅத்துடன், இஸ்லாமாபாத் குறித்து அண்டை நாடான ஆப்கானிஸ்தான் விடுத்த எச்சரிக்கை என்பவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: