சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!

Friday, February 11th, 2022

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

யேமன் சவுதி அரேபியா எல்லையில் உள்ள விமானநிலையமொன்றை இலக்குவைத்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆளில்லாம விமானதாக்குதலின் போதே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

சவுதி அரேபிய படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்கவைத்தனர் அதன்சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பங்களாதேஸ் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் காயமடைந்;துள்ளனர்.

தங்களிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகக்காக பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை இலக்குவைத்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

000

Related posts: