உண்மைகளை உடைத்த பன்னீர் – கலக்கத்தில் சசிகலா !

Wednesday, February 8th, 2017

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஊடகங்களுக்கு வெளியிட்ட பரபரப்பு தகவலைத் தொடர்ந்து அ.தி.மு.க கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் போயஸ் தோட்டம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னாள் 40 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என பரபரப்பு தகவல் வெளியிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் போயஸ் தோட்டம் நோக்கி படையெடுத்துள்ளனர்.

மேலும், அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் சசிக்கலா மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.அத்துடன், இந்த சந்திப்பின் போது பன்னீர் செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ops_new_1_12438

Related posts: