மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!
Wednesday, July 4th, 2018ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகி இருந்தார்.
அவர் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த தொகையை அவர் இரண்டு தவணைகளில் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related posts:
உலங்குவானூர்தி ஊழல் விவகாரத்தில் முன்னாள் விமான தளபதி உட்பட மூவர் கைது!
பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!
உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !
|
|