மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!

Wednesday, July 4th, 2018

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகி இருந்தார்.

அவர் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதுடன், இந்த தொகையை அவர் இரண்டு தவணைகளில் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related posts: