3 ஆண்டு காலப் பகுதியில் 1 இலட்சத்து 10 ஆயிரம் வன்புணர்வு வழக்கு!

Sunday, July 22nd, 2018

2014 – 2016 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெண்களுக்கு எதிரான வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டகைளையும் கடுமையாக்க வேண்டும் என்பன போன்ற வாதங்கள் பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படுகின்றது.

இந்தநிலையில் நாடாளுமன்ற மேலவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பான எழுத்துபூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜீ, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 333 வன்புணர்வு வழக்குகள் நாடுமுழுவதும் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

அவற்றில் 2016 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 வழக்குகளும் 2015 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகளும் மற்றும் 2014 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 வழக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: