பிரித்தானியாவை அச்சுறுத்தும் மர்மக்காய்ச்சல்: மூன்று வாரங்களில் 230 பேர் உயிரிழப்பு!
Tuesday, March 6th, 2018
பிரித்தானியாவில் பரவிவரும் மர்மக் காய்ச்சலினால் இதுவரை 230 இற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 18, 000 பேர் வரையில் இந்தக் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், இதில் சிலர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று வாரங்களாக இந்த மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்மக் காய்ச்சலை கண்டறிவதற்காக விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு மக்கள் மர்மக் காய்ச்சல் குறித்து அவதானமாக இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் தீ விபத்து!
பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!
வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
|
|