ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா!

Thursday, March 25th, 2021

வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது.
வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் கீழ் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பதற்றத்தைத் தூண்டுவதாகவும், வட கொரியா கொள்கையை இறுதி செய்யும் பைடன் நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: