சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பிலிப்பைன்ஸில் 8 பேர் பலி!

Saturday, July 27th, 2019

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலும் சில மணி நேரத்துக்குப் பிறகு காலை 7.38 மணிக்கு 9.4 ரிக்டர் அளவில் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டென்ஸ் தீவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் முதலாவது பூகம்பம் ஏற்பட்டதாகவும் இரண்டாவது பூகம்பம் சுமார் 4மணித்தியாலங்களிற்கு பின்னர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கங்களில் சிக்கி 8 பேர் பலியாகினர் என்றும், மேலும் 60 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: