கடும் மழை : சூடானில் 62 பேர் உயிரிழப்பு!
Monday, August 26th, 2019
சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சூடானில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கும் அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கிறிஸ்தவ மதகுருக்கள் இருவர் கடத்தி கொலை!
திடீர் என விமானம் விபத்துக்குள்ளாகியதால் 3 பேர் பலி!
உலகப் போர் மூழுமா? உலக அளவில் ஏற்பட்டுள்ள அச்சம்!
|
|
|


