திடீர் என விமானம் விபத்துக்குள்ளாகியதால் 3 பேர் பலி!
Friday, March 9th, 2018
அமெரிக்க விமான நிலையத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பைப்பர்-31 என்ற விமானம் புறப்பட்டு உயரப் பறந்த சிறிது நேரத்தில் இயந்திரத்தில் கோளாறுஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார்.
ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்துசென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
பாரம்பரிய உடையை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
சசிகலாவின் தண்டனைக்காலம் அதிகரிக்கும் - ரூபா
உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவா்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் - ஐ.நா. எச்சரிக்கை!
|
|