காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- மீண்டும் கோருகிறது பாகிஸ்தான்!

Friday, July 29th, 2016

ஐநா  கண்காணிப்பின் கீழ் பாரபட்சமற்ற முறையில் காஷ்மீரில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நபீஸ் சகாரியா கூறியதாக அந்நாட்டு வானொலி  இந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. அந்த வானொலி செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:-

“ காஷ்மீரில் ஹூரியத் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கு நபீஸ் சகாரியா கவலை தெரிவித்தார். காஷ்மீரில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்த  சகாரியா, காஷ்மீரில் நிலவும் கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும்,காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பின் கீழ், பாரபட்சமற்ற முறையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்த சகாரியா அனைத்து சர்வதேச கூட்டங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை பகிஸ்தான் எழுப்பும் எனவும் தெரிவித்தார்” இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: