பிரான்ஸ் தாக்குதல்! 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம்!
Friday, July 15th, 2016பிரான்சின் நைஸ் நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் நுற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதலை ஒத்ததாக உள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி 3 மாதம் அவசரநிலையை பிரகடனம் செய்தள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் பாரீசிஸ் 130 பேரை பலி கொண்ட தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ. நா. சபை கண்டனம்!
இது ஒரு காட்டுமிராண்டிதனமான மற்றும் கோழைத்தனமாக தாக்குதல் என ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
ஒபாமா கண்டனம்!
பிரான்ஸ் சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தீவிரவாத தாக்குதல் போல் இருக்கும் இச்சம்பவத்தை ஒட்டுமொத்த அமெரிக்கர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Related posts:
|
|