துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,000 – இரு நாடுகள் பணிகளில் இருந்து விலகல்!

Sunday, February 12th, 2023

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000 ஐ கடந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றையதினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்க தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மற்றும் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தன்னார்வ மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ளதாக Syria Civil Defence (White Helmets) அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 108 மணிநேர தேடுதலுக்குப் பின்னர், இடிபாடுகளுக்கு அடியில் யாரும் உயிருடன் இருப்பார்கள் என்று நம்பவில்லை என்று குழுவினர் தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: