துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை!
Friday, November 4th, 2022துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நேற்று (03) துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதுடன் வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!
அமெரிக்க வரலாற்றில் விரிவான உட்கட்டமைப்பு திட்டம்!
கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!
|
|