மானஸ்தீவில் இருந்த அகதிகள் வெளியேற்றம்!

Saturday, November 25th, 2017

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று மானஸ்தீவில் தங்கி இருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் அவுஸ்திரேலியாவினால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு பலவந்தமாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம் மூடப்பட்டிருந்த போதும், 350க்கும் அதிகமான ஏதிலிகள் வெளியேற மறுத்து வந்தனர். இந்தநிலையில் பப்புவா நியுகினி காவற்துறையினரால் அவர்கள் இன்று பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related posts: