தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஸ்டாலின்

Monday, August 14th, 2017

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் தோல்வியை ஒப்புக் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளாார்.

மேலும், நீட் விடயத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக முதல்வரும் அமைச்சர்களும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுவரையிலும் தீர்வு காண்போம் எனக் கூறி தமிழக அரசு ஏமாற்று நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது இதனால் தமிழக அமைச்சர்களும் தாமாக பதவி விலகவேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நீட் விவகாரம் தொடர்பில் பா.ஜ கவுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதோடு, கூட்டாட்சி என்ற பெயரில் மத்திய அரசு இரட்டை வேடம் தரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: