இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து – 11 பேர் பலி – பலர் காயம்!
Saturday, October 8th, 2022இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்து பயணிகள் பலியாகினர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு வாகனங்களும் மோதிய நிலையில் பேருந்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளது.
சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை!
மீண்டும் அணு உலையை ஆரம்பிக்க நீதிமன்றம் தடை!
அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!
|
|