சட்டசபையில் வரலாறு படைத்த 170 கோடீஸ்வரர்!
Sunday, May 22nd, 2016தமிழக சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்தகுமார் முதல் இடத்தை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட மனு செய்த 997 வேட்பாளர்களில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தமிழக மக்கள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 பேர் கோடீஸ்வர்களாக உள்ளனர்
மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 70 சதவீதமானோர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். தமிழக சட்டசபை வரலாற்றிலேயே அதிக எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பது இதுவே முதல்முறையாகும்
அதிக கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள பணக்கார கட்சி என்ற முதலிட அந்தஸ்தை அ.தி.மு.க. தட்டிச் சென்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள்
இந்த 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதல் இடத்தை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.வசந்தகுமார் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 337 கோடி ரூபாவாகும்.
Related posts:
|
|