கடும் மழை, வெள்ளம் – பிரேசிலில் 10 பேர் உயிரிழப்பு!

Thursday, April 11th, 2019

பிரேசில் நாட்டில் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

24 மணி நேரத்தில் மட்டும் 31 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததனால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மின் இணைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: