எல்லைச் சுவரின் நிர்மணப் பணிகளை துரிதப்படுத்திய ட்ரம்ப்!
Monday, February 27th, 2017
சர்ச்சைக்குரிய வகையில் மெக்ஸிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள எல்லைச் சுவரின் நிர்மணப் பணிகளை துரிதப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த எல்லைச் சுவரை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். கொன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை குழுவினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மோசமான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இந்த எல்லைச் சுவர் அமைக்கப்படுவதற்கு மெக்ஸிகோ எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்த கொலம்பிய மக்கள்!
கார் குண்டு வெடித்ததில் வட சிரியாவில் 40 பேர் பலி!
ஜப்பானில் வரலாறு காணாத புயல்!
|
|