உக்ரைன் மக்களுக்கு பெலாரசில் அடைக்கலம் கொடுத்த ரஷ்யா!

Tuesday, March 8th, 2022

மனிதாபிமான நடவடிக்கையாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள உக்ரைன் மக்களுக்கு புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானப்படைகள் பேக்கரிகள் மீது குண்டுவீசி இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரியுபோல், கார்கிவ் மற்றும் இர்ஃபின் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும், ரஷ்யாவையும் மற்ற உலக நாடுகளையும் ஏமாற்றும் உக்ரைனின் திட்டம் பலிக்காது என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: