வலிமையான ஆயுதங்கள் இல்லாததால் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கையாளும்- ஹிலாரி கிளிண்டன்!
Saturday, October 1st, 2016
அமெரிக்கா பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிற. அமெரிக்காவை ஆட்சி செய்த அத்தனை அதிபர்களும் பாகிஸ்தானின் கொள்கைகள் குறித்து நன்கு அறிவார்கள்.
கடந்த காலங்களில் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யவில்லை என்பது வருத்தமளிக்கும் செயலாகும். தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் சண்டையால் தெற்காசியாவில் அமைதியின்மை தோன்றும் நிலை உருவாகியுள்ளது.
பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளில் சென்று சேரும் அபாயமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.வேறு வலிமையான ஆயுதங்கள் பாகிஸ்தான் வசம் இல்லாததால், பாகிஸ்தான் தனது தாக்குதலை தீவிரப்படுத்த உடனடியாக அணு ஆயுதங்களை கையாளும் ஆபத்து உள்ளதாக உலக தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதனால் தெற்காசிய பகுதியில் அமைதியை நிலை நாட்டவே அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
Related posts:
|
|