செஷெல்ஸில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
Sunday, September 11th, 2016செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான எல்.டி.எஸ்-க்கு புதிய தேசிய பேரவையில் 15 இடங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் காட்டுகின்றன. இது அதிபர் ஜேம்ஸ் மைக்கேலின் மக்கள் கட்சியை விட 5 இடங்கள் அதிகமாகும்.
இந்திய பெருங்கடலில் இருக்கும் இந்த தீவுக் கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி தான் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.. முடிவு அறிவிக்கப்படும் முன்னரே, புதிதாக அமையும் பேரவையோடு இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாக அதிபர் மைக்கேல் அறிவித்துள்ளார்.
Related posts:
700க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு!
ட்ரம்பின் அறக்கட்டளைக்கு தடை!
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம் - கடும் அதிருப்தியில் சீனா!
|
|