தீவிரவாத அச்சுறுத்தல்: ஜேர்மனியில் நிறுத்தப்பட்ட இசை நிழ்வு!

Saturday, June 3rd, 2017

ஜேர்மனியில் இடம்பெறும் இசைத் திருவிழாவான ‘ரொக் ஏம் ரிங்’ (ROCK AM RING) தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது

ஜேர்மனியில் நடத்தப்படும் ROCK AM RING&nbsp என்ற திருவிழா நேற்று மாலை Nuerburg&nbsp பகுதியில் நடைபெற இருந்ததுஇந்த இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுகிழமை மாலை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இதில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுஇந்த நிலையில், குறித்த இசை நிகழ்ச்சி, அந்நாட்டு காவல்துறையினரால் திடீரென் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் மென்செஸ்டரில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட் தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பலியாகினர்இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக குறித்த இசை நிகழ்ச்சி ஜேர்மனியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஎவ்வாறிருப்பினும், அந்த இசை நிகழ்ச்சி இன்று நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: