படகு விபத்து  : சூடானில் 22 குழந்தைகள் பலி!

Thursday, August 16th, 2018

சூடானில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர் என செய்திள் வெளியாகியுள்ளன.

சூடான் தலைநகர் கார்டோமிலிருந்து, 750 கி.மீ., தொலைவில் உள்ள பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், படகு ஒன்றில் நேற்று பள்ளிக்குச் சென்றனர். இந்த படகில், 40 குழந்தைகள் பயணித்தனர்.நைல் நதியில் சென்ற படகு, திடீரென கவிழ்ந்தது. இதில், 22 குழந்தைகள் பலியானதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. மற்றவர்களை பற்றிய விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

Related posts: