ஈராக் படையினர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 93 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Monday, February 20th, 2017

ஈராக்கின் மோசூல் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் படையினர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் 93 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள் தொடர்பான காணொளி ஒன்று நேற்று ஈராக் பாதுகாப்பு அமைச்சகத்தினால் வெளியிட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கில் உள்ள ஐ.எஸ் நிலைகள் மீது சுமார் 22 விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த விமான தாக்குதல்களுக்கு அமெரிக்காவிடம் இருந்தும் உதவிகள் பெறப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசம் உள்ள பொதுமக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபை, அங்குள்ள பொதுமக்கள் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

predator-firing-missile4

Related posts: