காணாமல் போன மலேசிய படகு: 25 சீன குடிமக்கள் உயிருடன் மீட்பு!
Monday, January 30th, 2017காணாமல் போன மலேசிய படகு இருந்த 25 சீன குடிமக்களை உயிருடன் கண்டுபிடித்துள்ளதாக மலேசியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதில் இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசியா அரசின் அமைச்சர் டடூக் பங் யூக் மிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவின் பிரபல சுற்றுலா தீவு ஒன்றுக்கு செல்லும் வழியில் போர்னியோவின் கடற்கரைக்கு அப்பால் படகு காணாமல் போனது.
மலேசியாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடல் பகுதியில் பெரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.மீட்பு நடவடிக்கைகளுக்கு, சீரற்ற கடுமையான வானிலை பெரும் தடையாக அமைந்துள்ளன.
Related posts:
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது - எலோன் மஸ்க் தெரிவிப்பு!
|
|