இஸ்ரேல் மீது தாக்குதல் – காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!
Friday, November 10th, 2023ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது குறித்து சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய காஸாவின் நான்கு சுதந்திர ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் மோதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தாக்குதல் தொடர்பாக காஸாவின் நான்கு ஊடகவியலாளர்கள் முன்கூட்டியே அறிந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள் எனவும் இஸ்ரேலின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நான்கு ஊடகவியலாளர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: சாதனை படைத்த ஸ்டோனிஸ்!
இனவெறி மிகுந்த வீடியோக்களுக்கு யூடியூப் நிறுவனம் தடை!
கொரோனா வைரஸ் : சீன அரசாங்கத்தின் விஷேட நடவடிக்கை!
|
|