யுக்ரைன் – கார்கிவ் பொலிஸ் திணைக்கள கட்டடம் மீது ரஸ்யா தாக்குதல்!

Wednesday, March 2nd, 2022

யுக்ரைன் காவல்துறை திணைக்கள கட்டடம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய போரில் யுக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை கட்டடம் கடுமையாக சேதமடைந்து தீப்பிடித்து எரியும் காணொளியை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இந்த காட்சிகள் யுக்ரைனின் உள்துறை அமைச்சின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோவால் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

கார்கிவில் உள்ள பிராந்திய நிர்வாக கட்டடம் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான மறுநாள் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்ய துருப்புக்கள் நகரத்திற்குள் நுழைந்து உள்ளூர் மருத்துவமனையைத் தாக்கியதாகவும் தொடர்ந்தும் போர் இடம்பெற்றுவருதாகவும் யுக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோன்று கார்கிவ் நகரில் யுக்ரைன் காவல்துறை கட்டடம் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

குறித்த ஏவுகணை தாக்குதலால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்காக ரஷ்யாவை யுக்ரைன் ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளதுடன், இது ஒரு ‘போர் குற்றம்’ என்றும் தெரிவித்தார்.

000

Related posts: