தொடர்ந்தும் கீழ் வளிமண்டல தளம்பல் – மழை நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
Tuesday, November 1st, 2022இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றையதினம் (01) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா, வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|