எரிவாயு உற்பத்தி தொடர்பான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, October 6th, 2021

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: