அமெரிக்கா- தென் கொரியா இணைந்து ஏவுகணை சோதனை

Friday, July 7th, 2017

 

அமெரிக்காவின் வரை சென்று தாக்கும் வலிமை மிக்கது என்று சொல்லப்படும் நீண்டதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

இருதரப்பும் தங்கள்  இராணுவ புஜபலத்தைக் காட்டுவதை நிறுத்தவேண்டும் என சீனாவும், ரஷியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இதனிடையே, வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை செவ்வாய்க்கிழமை தாம் வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்ததாக வடகொரியா அறிவித்தது.

எனினும் நீண்டதூரம் சென்று தாக்கும் அணு ஆயுத வலிமை வட கொரியாவிடம் இருக்காது என்று பெரும்பாலான வல்லுநர்கள் நம்புகின்றனர். 1950-53 ஆண்டுகளில் நடந்த கொரியப் போரானது, போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே நிறுத்தப்பட்டுள்ளதால், இருநாடுகளுக்கும் இடையிலான போர் முறைப்படியாக இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் வரை சென்று தாக்கும் வலிமை மிக்கது என்று சொல்லப்படும் நீண்டதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துப் பார்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் நேச நாடான தென் கொரியாவும் கூட்டாக ஜப்பானியக் கடலில் ஏவுகணைப் பரிசோதனை செய்துள்ளன.

போர் நிறுத்தம் போராக மாறாமல் இருப்பதற்குக் காரணம் சுயகட்டுப்பாடுதான் காரணம்; ஆனால் அந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என அமெரிக்க- தென்கொரியக் கூட்டணி தெரிவித்துள்ளது. வடகொரியா வேறுமாதிரியாக நினைத்தால் அது மோசமான தவறாக மாறிவிடும் என்று இக் கூட்டணி தெரிவித்தள்ளது.

இருதரப்பும் தங்கள்  இராணுவ புஜபலத்தைக் காட்டுவதை நிறுத்தவேண்டும் என சீனாவும், ரஷியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடகொரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.

இதனிடையே, வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts: