எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
Saturday, February 16th, 2019
கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த விபத்து தொடர்பாக கெரிசோ பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
பிரித்தானிய பிரதமர் கேமரன் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு?
புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் ஆணை தந்துள்ளனர் : இந்தியப் பிரதமர் மோடி !
ஹகிபிஸ் புயல் : வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் ரயில்கள்!
|
|
|


