பிரித்தானிய பிரதமர் கேமரன் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு?

Friday, June 24th, 2016

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த பிரித்தானியா வெளியேறவேண்டும் என வாக்கெடுப்பில் உறுதிப்படுத்தியிருப்பதன் காரணமாக பிரதமர் டேவிட் கேமரன் தான் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

இன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், எதிர்வரும் அக்டோபரில் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்கவேண்டுமா இல்லையா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் , கேமரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வரும் ஒரு சில மாதங்களுக்கு பிரித்தானியாவை  வழி நடத்தப் போவதாக தெரிவித்தள்ள அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கின்றன.

கறித்த கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளன. லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறக்கூடாது என்று வாக்களித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: