இலங்கை – இந்திய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் – இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா!
Monday, August 15th, 2016இலங்கை – இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதாகவும் விரைவில் குறித்த ஒப்பந்தத்திற்கான இறுதிகட்ட நகர்வுகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா தெரிவித்துள்ளார்..
உலக பொருளாதாரத்தில் பலம்பொருந்திய நாடாக உள்ள இந்தியாவின் சாதனைப்பயனங்களை இலங்கையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் இந்திய அரசாங்கம் எப்போதும் வழங்க தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|