தோல்வியால் புலம்பும் இங்கிலாந்து தலைவர்!
Friday, February 3rd, 2017கடந்த இரண்டு வருடங்களில் எங்கள் அணி கண்ட மோசமான துடப்பாட்டம் இது என இந்தியாவுடன் T20 போட்டியில் தோல்வியடைந்த விரக்தியில் இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று பெங்களூரில் நடைபெற்ற கடைசி T20 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது.
119 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி மேலும் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 127 ஓட்டங்களுடன் மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த மோசமான தோல்வி குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களில் எங்கள் அணி கண்ட மிகப்பெரிய தோல்வி இது என கூறியுள்ளார்.
மேலும், முக்கிய தருணத்தில் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டானது அணிக்கு பின்னடைவை ஏற்ப்படுத்திவிட்டதாகவும் மோர்கன் கூறியுள்ளார். அதேநேரம், பெங்களூர் ஆடுகளத்தை குறை சொல்லமாட்டேன் எனவும், அது மிக அருமையான ஆடுகளம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|