வடக்கின் வல்லரசன் தொடர் : ஊரெழு றோயல் அணி வெற்றி!
Monday, October 17th, 2016
வலிகாமம் லீக்கின் அனுமதியுடன் குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான வடக்கின் வல்லரசன் உதைப்பந்தாட்ட தொடரில் லீக் சுற்றில் அண்மையில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் மன்னார் ஜோசப்வாஸ் நகர் ஜக்கியம் மற்றும் ஊரெழு றோயல் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆட்டத்தின் 17, 18 ஆவது நிமிடங்களில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இரு கோல்களை பெற்றுக் கொடுத்தார் றோயல் வீரன் கோபன்.
தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டிய ஜோசப்வாஸ் நகர் ஜக்கியம் 20 நிமிடத்தில் ஜோன்சனின் அதிரடி மூலம் ஒரு கோலை பதிவு செய்ய ஆட்டத்தில் மேலும் அனல் பறந்தது. இருப்பினம் றோயல் வீரன் நிதர்சன் அற்புதமான முறையில் 22, 28ஆவது நிமிடங்களில் இரு கோல்களைப் போட்டார். மீண்டும் ஜோன்சன் அதிரடியாக 39ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்ய பதிலுக்கு கோபன் 43ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். எனினும் ஜோன்சனின் அபாரம் தொடர 46ஆவது நிமிடத்தில் ஜோசப்வாஸ் நகர் ஜக்கியம் சார்பாக ஒரு கோல் பதிவாகியது. என்றபோதிலும் 49ஆவது நிமிடத்தில் றோயல் சார்பாக நிதர்சன் ஒரு கோலைப் போட இறுதியில் 06:03 என்ற ரீதியில் றோயல் அணி வெற்றி பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக கோபன் தெரிவானார்.
Related posts:
|
|