ஒரே அணிக்காக 400 கோல்கள் – ரொனால்டோ சாதனை!

Wednesday, May 17th, 2017

செவிலா அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, 2009 ஆம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.

தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராகவும் விளங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் லா லிகா தொடரில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

இதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். ரொனால்டோ முதல் கோலை அடிக்கும்போது ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்த சாதனையாக அது அமைந்தது. ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இணைந்த பின்னர் லா லிகா தொடரில் 282 கோல்களும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 88 கோல்களும்,

கோபா டெல் ரெய் தொடரில் 22 கோல்களும், கிளப் உலகக் கோப்பை ஆட்டத்தில் நான்கு கோல்களும், ஸ்பெயின் சூப்பர் கிண்ணம் தொடரில் மூன்று கோல்களும், யூ,இ.எஃப்.ஏ. சூப்பர் கிண்ணம் தொடரில் இரண்டு கோல்களும் அடித்துள்ளார்.

Related posts: