இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – போராடி வென்றது சிம்பாப்வே!

Friday, October 28th, 2022

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சேன் வில்லியம்ஸ் 31 ஓட்டங்களையும், கிரேக் எர்வின் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் வசீம் 24 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அத்துடன், சதாப் கான் 23 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக ஷான் மசூத் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் சிகந்தர் ராசா 25 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: