சாதனை படைக்கும் முனைப்பில் மலிங்க!

Saturday, August 19th, 2017

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையில் ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய போட்டியாக அமையவுள்ளது.

லசித் மலிங்க இதுவரை 199 போட்டிகளில் விளையாடியுள்ளார். எதிர்வரும் 20ம் திகதி தம்புள்ளையில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டி லசித் மாலிங்கவிற்கு 200 வது போட்டியாக அமையவுள்ளது.

தற்போதைய நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 298 விக்கட்டுக்களை பெற்றுள்ள லசித் மலிங்க , இந்தியாவுடன் இடம்பெறும் இந்த போட்டியில் மேலும் இரண்டு விக்கட்டுக்களை பெறும் பட்சத்தில் அவர் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை பெறும் 13 வீரராக வரலாற்றில் இடம்பிடிப்பார்.

மேலும் , மலிங்க இந்த இலக்கை அடையும் பட்சத்தில் 300 விக்கட்டுக்களை பெறும் 4வது இலங்கை வீரராக சாதனை புத்தகத்தில் பெயர் பதியப்படுவார். தற்போதைய நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகப்படியான விக்கட்டுகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: