அணியை பழிதீர்க்க ஆர்வம் – பிளிஸ்சிஸ்!

Saturday, January 6th, 2018

தென்ஆப்பிரிக்க அணியின் தலைவர் 33 வயதான பாப் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது  ‘இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது வரும் என்று எனக்கு தெரியாது. அனேகமாக எங்களது சீனியர் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் தொடராக இது இருக்கும்.

2015-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றோம். அந்த தோல்விக்கு பழிதீர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம். அதனால் இந்த தொடரை நினைக்கும் போதே பரவசம் ஏற்படுகிறது.

கேப்டவுன் ஆடுகளத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நாங்கள் எந்த மாதிரி விரும்பினோமோ அதை போன்று இருப்பது போல் தான் தெரிகிறது. ஆடுகளத்தன்மையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்’ என்றார்.

Related posts: