உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணி உணர்ச்சிவசப்பட்டு தருணம்!
Sunday, November 20th, 2016
இலங்கை அணி தற்போது டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 5 வது இடத்திலும், ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 6 வது இடத்திலும், டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 8 வது இடத்திலும் உள்ளது.
இதற்கு காரணம் இலங்கை அணியின் மூத்த வீரர்கள் சிலர் ஓய்வு பெற்ற பின்பும் அந்த இடத்தை நிரப்புவதற்கு இன்னும் சரியான வீரர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இப்படி தரவரிசைப் பட்டியலில் சற்று பின் தங்கி இருக்கும் இலங்கை அணி 1996 ஆம் ஆண்டுகளில் அசைக்க முடியாத அணியாக இருந்தது.
அதில் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா, ரணதூங்கா, டி சில்வா , முரளிதரன் என அன்றைய காலக்கட்டத்தில் ஒரு அவுஸ்திரேலியா அணி போல் இருந்தது. இதன் காரணாமாகவோ என்னவோ 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணம் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வென்று இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அதே போன்று 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கிண்ணம் போட்டியில் இந்தியா அணி தான் கைப்பற்றும் என அனைவரும் கூறிக்கொண்டிருந்த போது, அதை எல்லாம் தவிடுபொடியாக்கி இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றது.
அந்த வெற்றியின் போது இலங்கை வீரர் ஜெயவர்த்தனே உணர்ச்சி தாங்க முடியாமல் அழுத சம்பவம் இலங்கை ரசிகர்கள் யாராலும் மறக்கு முடியாது. இந்த இரு உலகக்கிண்ணங்களையும் இலங்கை அணி வென்ற போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சி தொடர்பான வீடியோ கலக்கல் வீடியோ மேலே இணைக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|