TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 21st, 2023

எதிர்வரும் சிறு போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும் போகத்தில் TSP வழங்க முடிவு செய்யப்பட்டது, இருப்பினும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக கொள்முதல் செய்ய முடியவில்லை.

36,000 மெட்ரிக் தொன் TSP கொண்ட கப்பல் பெப்ரவரி மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கையை வந்தடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

பெரும் போகத்தில் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதில் 75% விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, விவசாய மையங்களில் 10,000 மெட்ரிக் தொன் மற்றும் கிடங்குகளில் 30,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் உட்பட 20,000 மெட்ரிக் தொன் உள்ளது.

, 2023 ஆண்டு நெற் செய்கைக்கு தேவையான அனைத்து உரங்களையும் விவசாய அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: