H1.N1 நோய் தொற்றுக்கு சிகிச்சை கொடுப்பதில் சிக்கல்!
Monday, September 19th, 2016நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வைத்தியசாலைகளில் இல்லையென தாதியர் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியள்ளது.இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!
சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீட...
நாட்டிற்கு நன்மை கிடைக்கும் வகையில் போட்டித்தன்மை கொண்ட எரிபொருள் விநியோகத்தை உருவாக்குவதே அரசாங்கத்...
|
|