தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து – மின்சார சபை கோரிக்கை!

Wednesday, November 25th, 2020

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் மழையுடனுடனான கால நிலை தொடரும் சூழ்நிலையில், வட மாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், மின் வடங்கள் அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் (021) 202 4444 அல்லது யாழ்ப்பாணம் 0212222609 திருநெல்வேலி, கோண்டாவில் 0212222498 சுன்னாகம் 0212240301 சாவகச்சேரி 0212270040 பருத்தித்துறை 0212263257 வட்டுக்கோட்டை 0212250855 வேலணை 0212211525 பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: