வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்ட நடவடிக்கை!

Friday, July 8th, 2016

வெளிநாடுகளில் பணம் வைப்புச் செய்துள்ளவர்கள் தொடர்பான விபரங்ளை திரட்ட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னதாக பனாமாவில் பணம் வைப்புச் செய்தவர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்ட போதிலும் அவற்றில் பெரும்பலானவர்கள் போலிப் பெயர்களில் பணம் வைப்புச் செய்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதனால் இந்த நடவடிக்கையானது தோல்வியைத் தழுவியது. எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: