முல்லை மாவட்டத்தில் வடமாகாண ஆளுனருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு விசாரணைகள்  நடைபெற்றுள்ளது!

Wednesday, November 15th, 2017

முல்லைமாவட்டஅரசாங்கஅதிபர் ரூபவதிகேதீஸ்வரன் தலைமையில் 2017.11.14 இன்று இடம் பெற்ற நிகழ்வில்  முல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக 42 முறைப்பாடுகளில் வீடுகாணிபோன்ற முறைப்பாடுகளில் 20 முறைப்பாடுகள் இன்றையதினம் விசாரணைக்குஎடுக்கப்பட்டுள்ளது.

இதில் 18 பிரச்சனைகளுக்குதீர்வுகள் வடமாகாணஆளுனர் றெஜினோல் குரேஅவர்களினால் மக்களுக்குநேரடியாகதீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணஆளுனரின் செயலாளர் இளங்கோபன் அவர்களும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் காணிப் பகுதிஅதிகாரிகள் கிராமசேவையாளர்கள் ஆகியோரும் விசாரணையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: