40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் – நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரியாலயம் தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019

நெல் சந்தைப்படுத்தல் சபையால் 40 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சபையின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

நெல் அறுவடை தற்போது வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சபையில் அரச நிர்ணய விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. ஒரு கிலோ சம்பா 41 ரூபாவுக்கும் ஒரு கிலோ நாடு 38 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

ஒரு விவசாயிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ கிராம் நெல் வரையில் கொள்வனவு செய்யப்படும். இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 32 ஆயிரம் கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts:

நாடாளுமன்றின் செயற்பாடுகளை ஒன்லைன் முறையில் முன்னெடுக்கத் திட்டம் -பணியாளர்களின் எண்ணிக்கை வரையறுக்க...
நகர தொடங்கியது தாழமுக்கம் - 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளில் கனமழை - புயலாக மாறவும் சாத்தியம் என எச்ச...
அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள் - கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டு!